Monday 12 November 2012

'தீப ஒளி' பரவட்டும்!


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

உண்மையான மகிழ்ச்சி என்பது விழாக்களை நாம் பாதுகாப்பாகக் கொண்டாடுவதில்தான் இருக்கிறது. பாதுகாப்பு என்பது நமக்கு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியுள்ளவருக்கும், சுற்றியுள்ளவைகளுக்கும்தான். இதைத்தான் ரஞ்சித் எழுதிய உயிரின்வலி சிறுகதை நமக்குச் சொல்கிறது.

வெடிகளைப் பொருத்தவரை தயாரித்து கடைகளில் கொலு ஏறும்வரை ஒருநிலை. அதை உயிர்மையில் வந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரை காட்டுகிறது. அதை நாம் வாங்கி கொளுத்திய பின்புள்ள அடுத்த நிலையைக் கீற்றில் வந்த கட்டுரை விளக்குகிறது.

இம்மாணவப் பருவத்தில் இவ்விரண்டையும் அறிந்துகொள்வது மட்டுமின்றி, உங்களின் நட்புக்குரியவர்களுக்கும் இதைக் கூறுங்கள். மேலும், தமிழகத்திலுள்ள வேடந்தாங்கல், கூந்தன்குளம், கிட்டாம்பாளையம், வேட்டன்குடி ஆகிய கிராமங்களில் அதிகமான பறவைகள் வசிப்பதால் அங்குள்ளவர்கள் யாரும் வெடி வெடிப்பதில்லை. இதை அங்குள்ள சிறுவர்களே மகிழ்ச்சியாகக் கூறுகிறார்கள்.

தீப ஒளி உங்கள் உள்ளங்களிலிருந்து இல்லங்களில் பரவட்டும்.

No comments:

Post a Comment