தொகுப்பு: அசின் சார், கழுகுமலை.
நமது
பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
முடியாது
என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான்
வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது.
வாழ்க்கையில் இடர்ப்பாடுகள் அவசியம்.
ஏனென்றால், வெற்றி என்ற மகிழ்ச்சியை அனுபவிக்க அவை
உதவியாக இருக்கும்.
கனவு, கனவு, கனவு அவசியம். கனவுகள் எண்ணங்களாகும், எண்ணங்கள் செயல்களாக வடிவெடுக்கும்.
கனவு காணுங்கள். ஆனால், கனவு என்பது நீங்கள்
தூக்கத்தில் காண்பது அல்ல. உன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே இலட்சியக்
கனவு.
அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள்
கடமையைப் பாழாக்கிவிடும். கடமையைப் பற்றி கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை
அழகாக்கும்.
ஒரு முட்டாள் தன்னை
முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகின்றான். ஒரு புத்திசாலி தன்னை
புத்திசாலி என்று பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாளாகின்றான்.
கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னைக் கொன்றுவிடும்.
கண்ணைத் திறந்து பார். நீ அதை வென்று விடலாம்.
எல்லா உயிர்களிடத்திலும் அன்பாய் இருங்கள்.
ஆனால், மனிதர்களிடத்தில் மட்டும் விழிப்பாய் இருங்கள்.
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன
நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்; உயர்ந்தவன் என்ற உறுதி வேண்டும்.
இன்னல்களும் பிரச்சனைகளும் நாம்
வளர்ச்சியடைவதற்காக கடவுள் வழங்கும் வாய்ப்புகள் என்பது என் நம்பிக்கை. எனவே
உங்களுடைய நம்பிக்கைகளும் கனவுகளும் இலட்சியங்களும் தகர்க்கப்படும்போது அந்த
சிதைவுகளுக்கிடையே தேடிப் பாருங்கள்! இடிபாடுகளுக்கிடையே புதைந்து கிடக்கும் ஒரு
பொன்னான வாய்ப்பு உங்கள் கண்ணில் படக்கூடும்!
ஆண்டவனின் கருணை என்றும் முடிவில்லாதது. அது
நிரந்தரமானது! இந்த சக்தி உங்களுடைய லட்சியங்களை
எட்டுவதற்கும் கனவுகளை நனவாக்குவதற்கும் உதவி செய்யும்.
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல
திறமைகளும் வெளிப்படுகின்றன.
நம்பிக்கை நிறைந்த
ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.
பிரச்சினையை
சகித்துக்கொள்ளாமல், எதிர்கொண்டு
சமாளியுங்கள்.
வெற்றிக்கும்
தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பதுதான் பிரச்சினை. வாட்டி
வதைத்தாலும் கடுமையாக பாடுபட்டால்தான் பிரச்சினைகளோடு மல்லுக்கு நின்று தீர்வு காண
முடியும்.
நம் அனைவருக்கும் ஒரே
மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அனைவருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ள
ஒரே மாதிரி வாய்ப்புகள் உள்ளன.
காலத்தின் மணல்
பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து
நடக்காதே!
கற்றலின் ஒரு அங்கமாக
தவறுகளை அனுதிக்க வேண்டும். தவறே செய்யக்கூடாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
துணிச்சலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் முக்கியம்.
தனது இலக்கைக்
குறிவைத்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு சின்னப்புள்ளியும்
பெரும் புள்ளிதான். எனவே சளைக்காமல் முயற்சித்து கொண்டிருங்கள்.
வெட்டித்தனமாக
இருப்பதிலும் சில்லரைத்தனமான விஷயங்களிலும் மனதை அலைபாய விடக்கூடாது என்பதில்
விடாப்பிடியாக இரு! அதிகமான உணர்வதலில், ஏராளமாகக் கற்றுக் கொள்வதில், நிறைய
வெளிப்படுத்துவதில் ஆசை கொண்டிரு!
நீண்ட நாள் முழுவதும்
கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உண்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய
கரங்கள்!
வெற்றி பெற வேண்டும்
என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான் வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
மழைக் காலத்தில் எல்லாப் பறவைகளும்
கூட்டைத் தேடி அடைகின்றன. கழுகுகளோ மேகங்களுக்கும் மேலே பறந்து மழையையே
தவிர்த்துவிடுகின்றன. பிரச்சினைகள் பொதுவானவை, நம்முடைய அணுகுமுறைகள்தான்
வித்தியாசத்தைக் காட்டுகின்றன.
முதல் வெற்றிக்குப் பிறகு
ஓய்வெடுக்காதீர்கள்; இரண்டாவது முயற்சியில் தோல்வியடைந்தால்
முதல் வெற்றி அதிர்ஷ்டத்தால் விளைந்த குருட்டாம்போக்கான வெற்றி என்று
விமர்சிப்பார்கள்.
தங்களுடைய தொழிலில் சிகரத்தை
எட்ட விரும்புகிறவர்களுக்குத் தேவையான அடிப்படைத் தகுதி முழுமையான பொறுப்புணர்வு.
தன்னால் முடிந்த மட்டும் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்திப் பாடுபடும் ஆசை
வந்துவிட்ட ஒருவரிடம் வேறு எந்த ஆசைக்கும் இடமிருக்காது!
நமது ஆரோக்கியத்திற்குக்
கஷ்டங்கள் அவசியம் தேவை! நமது உடலுக்குள்ளேயே நல்ல விதமான உணர்வுப்பூர்வ
சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ளாவிட்டால் வெற்றியடைந்த பிறகு அதை அனுபவித்து
மகிழ்ச்சியடைய முடியாமல் போய்விடும் என்பதை நாம் உணர வேண்டும்!
தேவையான அளவிற்கு
சுதந்திரமாகச் செயல்படும் உரிமையும் அதிகாரமும் உடைய ஒரு தலைவரால்தான் தமது அணியை
வழிநடத்திச் செல்லும் பொறுப்பையும் வெற்றிகரமாக நிறைவேற்ற இயலும்.
வேலைநாட்களில் அன்றாடக்
கூச்சல், குழப்பம்
சந்தடியெல்லாம் அடங்கியதும் ஆற, அமர சிந்தித்து அடுத்து வரப்போகும் புத்தம் புது நாளை
எதிர்கொள்வதற்கு உன்னை நீ செம்மையாகத் தயார் செய்து கொண்டால் எதிர்காலத்தில் நீ
வெற்றிகரமான தலைவன்தான்!
எந்த அளவிற்கு உங்களைடைய
அறிவுத்திறனால் தற்போதைய நிலவரம் வரைத் தெரிந்து வைத்து இருக்கிறீர்களோ அந்த
அளவிற்குத்தான் நீங்கள் சுதந்திர மனிதர்!
உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை
நிர்ணயித்து விடாதே. ஏனென்றால், கையே இல்லாதவனுக்கும் கூட எதிர்காலம் உண்டு.
கால எல்லையைத் தவிர
வேறு எந்த விதத்திலும் ஒருவரின் அறிவாற்றலை அபகரிக்க இயலாது.
சுயசிந்தனை ஆற்றலும்
தன்னம்பிக்கையும், தன்னைத்தானே அறிந்துக்
கொள்ளும் திறனும் நிறைந்த மக்களைக்
கொண்டிருக்கும் தேசத்தை எந்தத் தேசவிரோத அல்லது சுயநல சக்தியாலும் ஆட்டிப் படைக்க
முடியாது.
அற்புதங்களை அகஸ்மாத்தாகச் செய்ய
முடியாது. அடுத்தடுத்துச் செயல்பட்டுக் கொண்டே இருந்தால்தான் சாதிக்க முடியும்.
வெற்றிக்கான விளக்கவுரை வலுவாக இருந்தால், தோல்வி எப்போதுமே நம்மை ஆட்கொள்ளாது.
வித்தியாசமாகச் சிந்திக்க, புதியதைக் கண்டுபிடிக்க, இதுவரை பயணப்படாத பாதையில் பயணப்பட, இதுவரை சாதித்திராத சாதனைகளைச்
செய்துமுடிக்க துணிச்சலைப் பெறுங்கள் என்பதே இளைஞர்களுக்கு என்னுடைய செய்தி.
ஒவ்வொரு
இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து
பறக்கட்டும்! இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசிப்
பரவட்டும்!
* * *