Thursday 26 April 2012

வீட்டுக்கு வெளியே வாங்க!

           ம் பள்ளியில் 12 -ம் வகுப்பு(2010 -2011 இல்) படித்து விட்டு தூத்துக்குடியில் பி.எஸ்சி படித்து வரும் அருள் ஜேசுராஜ், தூத்துக்குடியில் உள்ள ஒரு இளைஞர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறான். படிக்கும் போதே பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி ஆகியவற்றில் மிகுந்த ஆர்வமுடைய அவன், இருபதுக்கும் மேற்பட்ட இருபால் இளையோரும் உள்ள இவ்வியக்கத்தின் பணிகளாக நம்மிடம் கூறியன:
             எங்களுடைய படிப்பு நேரம் போக விடுமுறைநாட்களில் எங்கள் பணிகளைச் செய்கிறோம். சமூக விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த பல்வேறு கலைநிகழ்ச்சிகளை (கரகம்,களியல்,சிலா,பறை,ஒயில்,ஒத்தக்கம்பு போன்ற நடனங்கள் மூலமும்,பட்டிமன்றம்  மூலமும்)பல்வேறு இடங்களில் நிகழ்த்தி வருகிறோம்.  எங்களின் கலைநிகழ்ச்சிகளை அருகிலுள்ள கோவில் திருவிழாக்களுக்கு விரும்பி அழைக்கிறார்கள். 
                        அண்மையில், நியுக்ளியர் அணுவால் ஏற்படும் தீமைகளைக் குறித்து வீதி நாடகங்கள் நடத்தி இருக்கிறோம் .கூடங்குளம் சென்று அங்கு போராடும் மக்களையும், உதயகுமாரையும் சந்தித்து வந்திருக்கிறோம். 
                       தெருவோரக் குழந்தைகள், பிச்சைஎடுக்கும் குழந்தைகள் போன்றோரைக் கண்டுபிடித்து தூத்துக்குடி ஆயரின் கீழ் செயல்படும் தமிழ்நாடு பல்நோக்கு சமூகசேவை சங்கத்திற்கு தெரியப்படுத்துகிறோம். அரசு உதவி பெரும் அச்சங்கம் அக்குழந்தைகளுக்குத் தேவையான உதவி செய்கிறது. இதே போல கொலை,கொள்ளையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்து, அவ்வீட்டிலுள்ள குழந்தைகளையும் இச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
              ஒவ்வொரு ஞாயிறும் பிற்பகலில் வீடுகள் சந்தித்து செபித்தல், மாதமிருமுறை அரசு மருத்துவமனையில் ஆதரவற்று இருக்கும் நோயாளிகளைச் சந்தித்து ஆறுதல் கூறுதல். தூத்துக்குடியில் உள்ள முதியோர் இல்லம், மாற்றுத் திறனாளிகள் இல்லம், குழந்தைக் குற்றவாளிகள் போன்றோரைச் சந்தித்து நம்பிக்கையூட்டுதல் போன்ற பணிகளையும் செய்கிறோம்
                                      இப்பணிகளுக்கு மத்தியிலும்  தன் படிப்பில் முதலாம் ஆண்டில்
86 % சதவீத மதிப்பெண் வைத்துள்ளான் அருள். 
              இன்றைய இளைஞர்களில் அதிகம் பேர் விடுமுறை நாட்களில், பத்துக்கும் மேற்பட்ட பாக்கெட்டுகள் உள்ள பேன்ட் அணிகிறார்கள். அதில் காரணம் தெரியாது பல கயிறுகள் தொங்க, எண்ணெய் தேய்க்காத காஞ்சிபோன அவர்களின் தலைக்குப் பின், தொங்கும் குல்லாஉடனான 
டி-சர்ட் அணிந்து கொண்டு, கழுத்தில் கையில் கண்டபடி ஸ்டீல் செயின், டாலர் சகிதமாக நண்பர்களுடன் ஊர்சுற்றுவதுபார்ட்டி என்ற பேரில் மது போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது, அரட்டையடிப்பது; இன்னும் சிலர், உண்பது, உறங்குவது, டிவி பார்ப்பது என்ற கொள்கைப்பிடிப்போடு இருப்பவர்களும் உண்டு. யாரோடும் ஒட்டாத பயங்கரப் படிப்பாளிகள். சிலர் டியூசன் போவதாகக் கூறி  இல்லாத வம்பை வீட்டுக்கு இழுத்து வருவார்கள். பேஸ் புக்கில் புதைந்து கிடப்பது. வேறு சிலரோ, அகப்பட்ட பெண்களையெல்லாம் தோழி என்ற பெயரில், காதோடு ஒட்டவைத்த "செல்"லும் கையுமாகத் திரிவார்கள். இதுதான் இன்றைய இளையோரைப் பாழ்படுத்தும் வாடிக்கைகள்!
            இவர்களுக்கு  மத்தியில் அருள் மற்றும் குழுவினரின் செயல்பாடு நமக்கு மகிழ்ச்சி  தருவதாக உள்ளது. இவ்வாறு ஒரு புதிய இளைய தலைமுறையை உருவாகும் பணியில் ஈடுபட்டுள்ள அருட்தந்தை கிராசிஸ் மைக்கேல் அவர்கள்இளைஞர் பணியகத்தின் இயக்குனராகப் பொறுப்பு வகிப்பது மட்டுமின்றி, உண்மையிலேயே பணியாற்றி வருவது சிறப்பு!
             ளைஞர் இயக்கம் நடத்துபவர்களுக்கு, இவர்களைத் தெரிந்த பின்பாவது புத்தி வரட்டும்!

Saturday 21 April 2012

சொல் புதிது! - புதிய தளம்



அன்பு மாணவச்  செல்வங்களே,
சமூகம் மற்றும் பொதுவாக எழுதப்படும் நீள் கட்டுரைகளை, குறுங்கவிதைகளை 
என்ற புதிய தளத்தில் காண உங்களை அன்புடன் அழைக்கின்றேன்.