அன்பு மாணவர்களுக்கு,
வணக்கம்.
புளியங்குடி,
எஸ்.வீராச்சாமி செட்டியார் கல்வியியல் கல்லூரியில் இன்று
(27- 09 – 2112) ஓவியக் கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்னை ஓவியக் கல்லூரி
முன்னாள் முதல்வர் சந்ரு, அதே கல்லூரியின் விளம்பரக் கலை விரிவுரையாளர் கமலக்
கண்ணன், குறும்பட இயக்குநர் கணபதி, எஸ்.கொண்டல்ராஜ் மற்றும் தென்காசி வட்ட ஓவிய
ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். மேலும், புளியங்குடி எம்.முத்துராமலிங்கம், நெல்லை
பொன்வள்ளிநாயகம் ஆகியோரும் வந்திருந்தனர்.
கண்காட்சியில் மேலுள்ள ஓவியர்களின்
ஓவியங்களும், ம.செ., மாருதி போன்றோரின் ஓவியங்களும் இடம்பெற்றிருந்தன. கல்லூரி
மாணவர்களின் ஓவியங்களும் ஆங்காங்கே இருந்தன.
தேங்காய் செரட்டையில்
கார்விங் வேலைகளுடன் இருந்தது நம்மை வியக்க வைத்தது. மாணவர்கள் செய்திருந்த களிமண்
சிலைகளும் அங்கு இருந்தன. விழா மற்றும் கண்காட்சி ஏற்பாடுகளை கல்லூரியோடு சேர்ந்து
எஸ்.எஸ்.மணியன் கலைக் கூடம் செய்திருக்கிறது. கண்காட்சி 28, 29 – 09 – 2112 ஆகிய இரு நாட்கள் இருக்கும்.
கலை நம் வாழ்க்கையில் ஓர்
அங்கம். அவசர உலகில் அதைப் பழகவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல், இன்றைய
நெருக்கடியில் மூழ்கி மனிதன் பாழாய் போய்க் கொண்டிருக்கிறான். நம் அன்றாடப் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்வதற்கு கலையை ரசிப்பது மிக
அவசியம் என்று அறிஞர் அண்ணா கூடக் கூறுவார்.