கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தினுள்
உள்ள காந்தி மண்டபத்தில் 28 வது தேசிய புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது ஜூன் 8 ஆம் தேதி வரை இருக்கும்.
திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் இதை அமைத்துள்ளது.அன்னம்,ஆழி,உயிர்மை,காலச்சுவடு,கிழக்கு,கொற்றவை,சந்தியா,பாவை,பாரதி,புதுமைப்பித்தன்,கண்ணதாசன்,தாமரை,விஜயா,பிளாக் ஹோல் போன்ற பதிப்பகங்கள் மற்றும் விகடன் போன்ற பதிப்பகங்களின் புத்தகங்களும் இங்கு
இடம்பெற்றுள்ளன. இலக்கியம், கல்வி, தொழில்நுட்பம்,... என்று நீங்கள் எதிர் பார்க்கும் எல்லாப்
பிரிவுகளும் இருக்கின்றன. கல்கியும் காரல்மார்க்சும் கிடைக்கிறார்கள். தற்கால
எழுத்தாளர்களின் புத்தகங்களும், குழந்தைகளுக்கான
புத்தகங்களும் அதிகமாக உள்ளன.
சி.ஜெயபாரதன் எழுதிய அணுசக்தி, நடன.காசிநாதன் எழுதிய தமிழர் காசு இயல், மயிலை.சீனி.வேங்கடசாமி எழுதிய தமிழர்
வளர்த்த அழகு கலைகள், கி.ரா. எழுதிய
தாத்தா சொன்ன கதைகள், பேல பெலாஸ்
எழுதிய சினிமாக் கோட்பாடு, எஸ்.ராமகிருஷ்ணன்
எழுதிய காற்றில் யாரோ நடக்கிறார்கள், உலக சினிமா, தியோடர்
பாஸ்கரன் எழுதிய நம்மைச் சுற்றி காட்டுயிர், ஜெயமோகன் எழுதிய சிலுவையின் பெயரால், சுஜாதா எழுதிய திருக்குறள் புதிய உரை போன்ற பல நூல்களை நான்
வாங்கினேன். 10% முதல் 30% வரை தள்ளுபடி தருகிறார்கள்.
எத்தனையோ முறை கோவில்பட்டி போறோம்
வாரோம். அப்படி என்னதான் இருக்குன்னு ஒரு பார்வை பார்த்துவிட்டுத்தான் வாங்களேன்.
No comments:
Post a Comment